- சீர்காழி
- மயிலாடுதுரை மாவட்ட நிர்வாகம்
- மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் நிலையம்
- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
சீர்காழி: மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சீர்காழி, விவேகானந்தா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்த 80க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இம்முகாமில் 18 வயது முதல் 35 வரை உள்ள 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் என மொத்தம் 1100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் (மாற்றுத்திறனாளிகள்) உட்பட 270 மேற்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. 175 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கும், 139 இளைஞர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.